வியாழன், 20 செப்டம்பர், 2012

பயங்கரவாதிகள் யார்?


சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி


ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் கல்வியாளர் ஒருவரிடம் இஸ்லாம் குறித்தும் பயங்கரவாதம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் அதற்கு அளித்த அருமையான பதில்:

முதல் உலகப் போர்
v  சுமார் இருபது மில்லியன் பேரைக் காவு கொண்ட முதலாம் உலகப் போரைத் தொடங்கியவர்கள் யார்? முஸ்லிம்களா?



இரண்டாம் உலகப் போர்
v  இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு உள்ளிட்டவற்றுடன் வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச் சேத்த்தை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போரைத் தொடங்கியவர்கள் யார்? முஸ்லிம்களா?



v  ஆஸ்திரேலியாவில் பழங்குடியின மக்கள் சுமார் இருபது மில்லியன் பேரைப் படுகொலை செய்தவர்கள் யார்? முஸ்லிம்களா?

v  ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டுகளை வீசி மனிதப் படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் யார்? முஸ்லிம்களா?



அணுகுண்டு வீசி அழிக்கப்பட்ட ஹிரோஷிமா


v  வட அமெரிக்காவில் 100 மில்லியனுக்கும் அதிகமான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்தவர்கள் யார்? முஸ்லிம்களா?


v தென் அமெரிக்காவில் 50 மில்லியனுக்கும் கூடுதலான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்தவர்கள் யா? முஸ்லிம்களா?


v  சுமார் 180 மில்லியன் ஆப்ரிக்க கருப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து அவர்களில் 88 சதவீதம் பேர் மரணம் அடைந்தபோது அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் அட்லாண்டிக் பெருங்கடலில் வீசியெறிந்தவர்கள் யார்? முஸ்லிம்களா?




இந்த மனிதகுல பேரழிப்புகள் எவற்றிலும் முஸ்லிம்களுக்கு அறவே பங்கில்லை. அனைத்துக்கும் முதலில் பயங்கரவாதம் என்பதன் பொருளை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.


முஸ்லிம் அல்லாத ஒருவர் ஒரு தவறு செய்தால் அதைக் குற்றம் (கிரைம்) என்று சொல்லும் உலக நாடுகளும் ஊடகங்களும் அதையே ஒரு முஸ்லிம் செய்தால் அதைப் பயங்கரவாதம் (டெர்ரரிசம்) என்கின்றன. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்?

- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெ...